தேவனுடைய ராஜ்யத்தில், இறையியலில் தவறாக புரிந்து கொள்ளப்பட்ட ஒரு முக்கியமான தலைப்புகளில் ஒன்று. ஜெபம் என்பது தேவனோடு உரையாடுவது, இது ஒரு "உரையாடல்", தனிமையில் பேசுவது அல்ல, ஜீவனுள்ள தேவன் நமக்குள்ளே வாசம் பண்ணி அதில் நாம் வளருவதற்கு ஜெபம் ஒரு வழியாயிருக்கிறது. ஜெபத்தை பற்றிய நம்முடைய கருத்துக்கள் புதிய ஏற்பாட்டில் காணப்படவில்லை, பொருள் வழங்கும் இயந்திரம் போல நம்முடைய தேவைகளை பெற்று கொள்வதற்கு ஜெபத்தை ஒரு வழிமுறையாக மட்டுமே பார்க்கிறோம். ஆனால் இறையியல் வாயிலாக ஜெபத்தின் நோக்கம் என்னவென்றால். தேவனையே அறிந்துகொள்ளவும் மற்றும் அவரை தெரிந்து கொள்வதின் மூலம் அவரோடு நடந்து அவர் விருப்பத்தை நிறைவேற்ற முடியும்.
ஜெபம் என்பது நோவா தன் பேழையிலிருந்து வெளியே விட்ட புறாவைப் போல, அது ஒரு ஒலிவமரத்தின் இலையை கொத்திக்கொண்டு திரும்ப வந்து அவனை ஆசீர்வதித்தது, அது மாத்திரம் இல்லாமல் அவனிடத்திற்குத் திரும்ப வரவில்லை. வேதாகமத்தில் ஜெபத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி ஒத்த வாக்கிய அகராதியில்(Concordance) காணலாம். ஜெபத்தை குறிக்கிற வார்த்தைகள் ஜெபித்தல், விண்ணப்பம் செய்தல், வேண்டுதல் செய்தல் போன்ற வார்த்தைகள் KJV யில் 545 முறை குறிப்பிடப்பட்டுள்ளது. நான் அறிந்த ஒரு பெரும் அறிஞரின் மேற்கோள் இப்படியாய் சொல்லுகிறது. நாம் வேலை செய்யும் போது வேலை நடக்கும். ஆனால் நாம் ஜெபிக்கும் போதோ தேவன் நம்முடைய காரியங்களை செய்வார்.
தேவன் சகலத்தையும் ஆள்பவர்! அப்படியானால் நீங்களும் நானும் எதற்காக ஜெபிக்க வேண்டும்? நீங்கள் ஜெபிப்பதினால் தேவன் தன்னுடைய மனதை மாற்றி கொள்வாரா? சகலத்தையும் அறிந்த தேவன், தேவன் நம் எல்லோரையும் அறிவார்!! தேவன் நம்மை அறிந்திருக்கிறபடியால் நாம் பிறப்பதற்கு முன்னே நம்முடைய வாழ்வுக்கான திட்டங்களை வைத்திருக்கிறார். நம்மை பற்றி நமக்கு தெரிந்ததை விட அவருக்கு நன்றாக தெரியும். பிறகு, எதற்கு நான் ஜெபிக்க வேண்டும்? இயேசுவோடு வாழ்ந்து அவர் செய்த அற்புதங்களை கண்ட சீஷர்கள் அவரிடத்தில் "எவ்வாறு ஜெபிக்க வேண்டும்?" என்பதை கற்று தர வேண்டும் என்று ஒன்றை மாத்திரமே கேட்டார்கள். "அவர் ஒரு இடத்தில் ஜெபம்பண்ணி முடித்தபின்பு, அவருடைய சீஷரில் ஒருவன் அவரை நோக்கி: ஆண்டவரே, யோவான் தன் சீஷருக்கு ஜெபம் பண்ணப் போதித்ததுபோல, நீரும் எங்களுக்குப் போதிக்கவேண்டும் என்றான்" (லூக்கா 11:1).
இயேசு
எவ்வாறு ஜெபம் பண்ணினார்?
இத்தனை வருடமாய் நீங்கள் கிறிஸ்தவர்களாய் இருந்தும் கூட இந்த கேள்விக்கான விடையின் மூலம் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். இயேசு எப்பொழுதும் தனித்தே ஜெபம் பண்ணினார்!! "அவரோ வனாந்தரத்தில் தனித்துப் போய், ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்" (லூக்கா 5:16). "நீயோ ஜெபம்பண்ணும்போது, உன் அறைவீட்டுக்குள் பிரவேசித்து, உன் கதவைப் பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம்பண்ணு; அப்பொழுது, அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாய் உனக்குப் பலனளிப்பார்" (மத்தேயு 6:6). ஆகவே, இயேசு இப்பூமியில் வாழ்ந்த போது எவ்வாறு ஜெபம் பண்ணினார் என்ற இரகசியத்தை இந்த வேதப்பாடம் வாயிலாக கற்றுக்கொள்ளலாம்.
1. இயேசு ஞானஸ்நானம் எடுக்கும் பொழுது ஜெபம் பண்ணிக்கொண்டிருந்தார்:
"ஜனங்களெல்லாரும் ஞானஸ்நானம் பெற்றபோது, இயேசுவும் ஞானஸ்நானம் பெற்று. ஜெபம்பண்ணுகையில், வானம் திறக்கப்பட்டது;" (லூக்கா 3:21). "பரிசுத்த ஆவியானவர் ரூபங்கொண்டு புறாவைப்போல அவர்மேல் இறங்கினார். வானத்திலிருந்து ஒரு சத்தமும் உண்டாகி: நீர் என்னுடைய நேசகுமாரன், உம்மில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது” (லூக்கா 3:22).
2.கலிலேயாவிற்கு போவதற்கு முன் காலையில் தனிமையில் ஜெபம் பண்ணினார்:
"அவர் அதிகாலையில் இருட்டோடே எழுந்து புறப்பட்டு, வனாந்தரமான ஓரிடத்திற்குப்போய், அங்கே ஜெபம் பண்ணினார்" (மாற்கு 1:35). "சீமோனும் அவனோடே இருந்தவர்களும் அவரைப் பின்தொடர்ந்துபோய்" (மாற்கு 1:36).
3. 12 சீஷர்களை தெரிந்தெடுப்பதற்கு முன் இரா முழுவதும் ஜெபம் பண்ணும்படி வெளியே போனார்:
"அந்நாட்களிலே, அவர் ஜெபம்பண்ணும்படி ஒரு மலையின்மேல் ஏறி, இரா முழுவதும் தேவனை நோக்கி ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்" (லூக்கா 6:12). "பொழுது விடிந்தபோது, அவர் தம்முடைய சீஷர்களை வரவழைத்து, அவர்களில் பன்னிரண்டுபேரைத் தெரிந்துகொண்டு, அவர்களுக்கு அப்போஸ்தலர் என்று பேரிட்டார்" (லூக்கா 6:13).
4. யோவான்
ஸ்நானகனின் தலை துண்டிக்கப்பட்ட பின்பும் 5,000 பேரை போஷிப்பதற்கு முன்பும்.
"அவர் ஜனங்களை அனுப்பிவிட்டபின்பு, தனித்து ஜெபம்பண்ண ஒரு மலையின்மேல் ஏறி, சாயங்காலமானபோது அங்கே தனிமையாயிருந்தார்" (மத்தேயு 14:23). அவர் அதை கேட்ட போது தனிமையாய் இருக்கும்படிக்கு படவில் ஏறி அங்கிருந்து புறப்பட்டு போனார் அப்போது ஜனங்கள் கேள்விப்பட்டு அவரை பின் தொடர்ந்து போனார்கள்.
5. இயேசு
தேவனுடைய குமாரன் என்று பேதுரு வெளிப்பாடு பெறுவதற்கு சற்று முன்பு:
"பின்பு அவர் தமது சீஷரோடே கூடத் தனித்து ஜெபம்பண்ணிக்கொண்டிருக்கையில், அவர்களை நோக்கி: ஜனங்கள் என்னை யார் என்று சொல்லுகிறார்கள் என்று கேட்டார்" (லூக்கா 9:18).
6. மறுரூபமடைதல்:
"இந்த வார்த்தைகளை அவர் சொல்லி ஏறக்குறைய எட்டுநாளானபின்பு, அவர் பேதுருவையும் யோவானையும் யாக்கோபையும் கூட்டிக்கொண்டு, ஜெபம்பண்ணுகிறதற்கு ஒரு மலையின்மேல் ஏறினார்" (லூக்கா 9:28). "அவர் ஜெபம்பண்ணுகையில், அவருடைய முகரூபம் மாறிற்று. அவருடைய வஸ்திரம் வெண்மையாகிப் பிரகாசித்தது" (லூக்கா 9:29).
7. கெத்செமனே தோட்டத்தில் ஜெபம் (மத்தேயு 26:36-46, மாற்கு 14:32-42 மற்றும் லூக்கா 22:39-46):
"அப்பொழுது, இயேசு அவர்களோடே கெத்செமனே என்னப்பட்ட இடத்திற்கு வந்து, சீஷர்களை நோக்கி: நான் அங்கே போய் ஜெபம்பண்ணுமளவும் நீங்கள் இங்கே உட்கார்ந்திருங்கள் என்று சொல்லி;"
"பேதுருவையும் செபதேயுவின் குமாரர் இருவரையும் கூட்டிக்கொண்டுபோய், துக்கமடையவும், வியாகுலப்படவும் தொடங்கினார்."
"அப்பொழுது, அவர்: என் ஆத்துமா மரணத்துக்கேதுவான துக்கங்கொண்டிருக்கிறது; நீங்கள் இங்கே தங்கி, என்னோடேகூட விழித்திருங்கள் என்று சொல்லி,"
"சற்று அப்புறம்போய், முகங்குப்புற விழுந்து: என் பிதாவே. இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படி செய்யும்; ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார்."
“பின்பு, அவர் சீஷர்களிடத்தில் வந்து, அவர்கள் நித்திரை பண்ணுகிறதைக் கண்டு, பேதுருவை நோக்கி: நீங்கள் ஒரு மணி நேரமாவது என்னோடேகூட விழித்திருக்கக்கூடாதா?"
"நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு
விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள்; ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது என்றார்."
"அவர் மறுபடியும் இரண்டாந்தரம் போய்: என் பிதாவே, இந்தப் பாத்திரத்தில் நான் பானம்பண்ணினாலொழிய இது என்னை விட்டு நீங்கக்கூடாதாகில், உம்முடைய சித்தத்தின்படி ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார்."
"அவர் திரும்ப வந்தபோது, அவர்கள் மறுபடியும், நித்திரைபண்ணுகிறதைக் கண்டார். அவர்களுடைய கண்கள் மிகுந்த நித்திரைமயக்கம் அடைந்திருந்தது."
“அவர் மறுபடியும் அவர்களை விட்டுப் போய், மூன்றாந்தரமும் அந்த வார்த்தைகளையே சொல்லி ஜெபம்பண்ணினார்."
"பின்பு அவர் தம்முடைய சீஷர்களிடத்தில் வந்து: இனி நித்திரை பண்ணி இளைப்பாறுங்கள்: இதோ, மனுஷகுமாரன் பாவிகளுடைய கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுகிற வேளை வந்தது."
"என்னைக் காட்டிக்கொடுக்கிறவன், இதோ, வந்துவிட்டான், எழுந்திருங்கள் போவோம் என்றார்."
8. சிலுவையில் ஜெபம்
"அப்பொழுது இயேசு; பிதாவே இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார்" (லூக்கா 23:34). "இயேசு: பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச் சொன்னார்; இப்படிச் சொல்லி, ஜீவனைவிட்டார்" (லூக்கா 23:46).
மேலே குறிப்பிட்டதை தவிர, 5000 பேருக்கு போஷிப்பதற்கு முன்னும் அதே போல் 4000 பேருக்கு போஷிப்பதற்கு முன்னும் உணவுக்கான ஆசீர்வாத ஜெபத்தை சொல்லி ஜெபம் பண்ணினார். மேலும், மேல் அறையில் இராபோஜனப் பந்தியில் அப்பத்தை பிட்கும் முன் அதற்காக நன்றி செலுத்தி ஜெபம் பண்ணினார். இயேசு, பிரதான ஆசாரிய ஜெபத்தை பண்ணினார் (யோவான் 17:1-26).
டி.எ.கார்சன்ஸ் (D.A. Carson's) புத்தகத்திலிருந்து தழுவிய காரியங்கள்:
பிதா குமாரனைக் கொடுத்தார்.. யோவான் 17
குமாரன்
விசுவாசிகளுக்கு
கொடுத்தார்.... யோவான் 17
குமாரன்
பிதாவிடம் கேட்டு கொண்டார்...
யோவான் 17
இயேசுவைப் பின்பற்றுபவர்கள் மற்றும் உலகம் யோவான் 17
அவர்களெல்லாரும் ஒன்றாயிருப்பதாலும், அவர்களெல்லாரும் நம்மில் ஒன்றாயிருப்பதாலும், பிதா, தன்னுடைய குமாரனை அனுப்பினார் (யோவான் 17:21) என்கிற விசுவாத்தை ஏற்படுத்தியது.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் ஜெபத்தின் மற்றொரு அற்புதமான காரியம். "வாசம் பண்ணுதல்" என்ற கருத்து எண்ணற்ற வழிகளில் ஒருமைப்பாட்டை நிலைநிறுத்துகிறது. இயேசு நமக்கு கற்றுக்கொடுப்பது என்னவென்றால்:
1. பிதா குமரனில் இருக்கிறார். (யோவான் 17:21, 23)
2. குமாரன் பிதாவில் இருக்கிறார். (யோவான் 17:21)
3. விசுவாசிகள் பிதாவிலும், குமாரனிலும் இருக்கிறார்கள். (யோவான் 17:21)
4. குமாரன் விசுவாசிகளிடத்தில் இருக்கிறார். (யோவான் 17:23, 26)
வேதாகமங்களில் கிறிஸ்துவானவர் கூட பரலோகத்திலே பிரவேசித்திருக்கிறார் என்றும், இயேசு கிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார் என்று சுட்டிக் காட்டுகிறது. (ரோமர் 8:34, எபிரேயர் 7:25, 9:24 மற்றும் 1 யோவான் 2:1).